மேகம் கருக்குது.. மழை வர பார்க்குது.. வந்துருச்சுய்யா வந்துருச்சுய்யா.. காலையில் நனைந்த சென்னை!
சென்னை முழுவதும் சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: சென்னை முழுசும் இன்னைக்கு காலையில் குளுகுளுவென இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியாகி உள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு வரை பனிப்பொழிவு வாட்டி எடுத்தது. இதனால் சென்னைவாசிகள் ஸ்வட்டர் போடும் நிலைமை ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து சில தினங்களாகவே வெயில் தலைகாட்ட துவங்கியது.
இதனால் புழுக்கம் சூழ்ந்து கொண்டது. இந்த வெயிலையும், புழுக்கத்தையும் கண்டு இப்பவே கண்ணை கட்ட ஆரம்பிச்சிடுச்சோ என்று மக்கள் பயந்தேவிட்டார்கள்.
ஆனால் இன்று விடிகாலையிலேயே வானம் கருகருவென காட்சியளித்தது. மேகக்கூட்டங்கள் திரண்டு வந்தன. சூளைமேடு, அண்ணாநகர், அம்பத்தூர் பகுதிகள்ல லேசான மழையும் பெய்தது.
இவை தவிர பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது. ராயப்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம், வியாசர்பாடி, அயனாவரம், வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம், போரூர் ராமாபுரம் உள்ளிட்ட இடங்களில் இந்த சாரல் மழை பெய்து வருகிறது.
மற்ற இடங்களில் ஜில் காற்று வீசி வருவதால், சென்னைவாசிகளின் மனமும் ஜில்லென்று குளிர்ந்து கிடக்கிறது.