ஆந்திராவுக்கு வரவைத்து.. கட்டையால் அடித்தே கொல்லப்பட்ட எலக்ட்ரீசியன்.. காரணம் கள்ளக்காதல்!
Recommended Video
சென்னை: மனைவியுடன் கள்ளக்காதல் கொண்டிருந்த நபரை, ஆந்திராவுக்கு வரவழைத்து அடித்தேக் கொன்ற கணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். 42 வயதான இவர் எலக்ட்ரீசியன் ஆவார். லேபர் பள்ளித் தெருவில் வசித்து வந்தார். டிசம்பர் 18ம் தேதி இவர் ஆந்திராவுக்குப் போவதாக கூறி விட்டுப் போயுள்ளார். ஆனால் திரும்பவில்லை. இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது.
சங்கர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் கார்த்திகேயன் ஆந்திராவில் வைத்து அடித்துக் கொல்லப்பட்ட விவரம் தெரிய வந்தது.
ஒரு பிளாஷ்பேக்... ஆந்திர மாநிலம் சித்தூர் எஸ்சி காலனி 2வது தெருவில் வசித்து வருபவர் சிவக்குமார். இவரது மனைவி பெயர் மாதேஸ்வரி. சிவக்குமாருடன் அவரது தாயாரும் வசித்து வருகிறார். சிவக்குமாரின் சகோதரர் அனகாபுத்தூரில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு அருகில்தான் கார்த்திகேயன் வீடு உள்ளது.
சிவக்குமார் சகோதரர் வீட்டுக்கு வந்த சமயத்தில் மாதேஸ்வரிக்கும், கார்த்திகேயனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. அந்தத் தொடர்பு சித்தூர் வரை விடாமல் போயுள்ளது. இருவரும் செல்போனில் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இது அரசல் புரசலாக சிவக்குமாருக்குத் தெரிய வரவே அவர் அதிர்ச்சி அடைந்தார்.
வெளியேற மறுத்தால் கிளர்ச்சி வெடிக்கும்.. வட மாநில நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
கார்த்திகேயனை காலி செய்ய முடிவு செய்த சிவக்குமார் அவரை ஆந்திராவுக்கு வரவழைத்தார். அங்கு வைத்து உருட்டுக்கட்டையால் கார்த்திகேயனை சரமாரியாக அடித்துக் கொலை செய்தார். பின்னர் உடலை புதைத்து விட்டார். இந்த கொலை குறித்து மாதேஸ்வரிக்கும் தெரியும் எனக் கூறப்படுகிறது.
விசாரணையில் இந்த தகவல்கள் தெரிய வந்ததைத் தொடர்ந்து போலீஸார் சிவக்குமார், மாதேஸ்வரியைக் கைது செய்தனர்.