மெரினாவில் உயிருக்கு போராடிய சிறுவன்.. துணிந்து காப்பாற்றி பலியான மாணவர்.. ரியல் ஹீரோ!
மெரினா கடலில் சிக்கிய சிறுவனை கல்லூரி மாணவர் ஒருவர் காப்பற்றிய நிகழ்வு பெரும் வரவேற்ப்பை பெற்று இருக்கிறது.
சென்னை: மெரினா கடலில் சிக்கிய சிறுவனை கல்லூரி மாணவர் ஒருவர் காப்பற்றிய நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அந்த மாணவர் கடைசியில் கடலில் சிக்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடலில் இப்போதெல்லாம் இளைஞர்கள் விழுந்து பலியாகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் போலீஸ் நிறைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது.
இந்த நிலையில் நேற்று மெரினாவில் 15 வயது பள்ளி சிறுவன் ஒருவன் நீரில் மிதந்தபடி உயிருக்கு போராடி இருக்கிறான். அப்போது கடலுக்கு அருகே நண்பர்களுடன் விளையாடிக் கண்டு இருந்த பாண்டியராஜன் என்று 18 தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அந்த சிறுவனுக்கு உதவுவதற்காக கடலில் குதித்துள்ளார்.
போதுமான அளவில் நீச்சல் தெரியாது என்றாலும், வேகமாக அந்த மாணவனுக்கு உதவுவதற்காக கடலில் குதித்துள்ளார். அதேபோல் அலையில் போராடி அந்த மாணவனை காப்பாற்றி இருக்கிறார். சரியாக அந்த சிறுவனை காப்பற்றிய சமயத்தில் பெரிய அலை ஒன்று அடித்துள்ளது.
காஷ்மீரில் வெடித்த ''மர்ம'' குண்டு.. 5 பொதுமக்கள் பலி.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை]
இதில் இருவரும் காணாமல் போனார்கள். இருவரும் கடலை நோக்கி அடித்து செல்லப்பட்டனர். ஆனால் உடனே அங்கே வந்த மீனவர்கள் அந்த சிறுவனை மீட்டு உள்ளனர். ஆனால் பாண்டியராஜனை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
2 மணி நேரம் தேடியும் அவர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பாண்டியராஜன் பட்டினப்பாக்கம் கடைக்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். கடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டார். இவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலிகிராமம் தசரதபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் என்று அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. இவரின் துணிச்சலான செயல் பலருக்கும் கலக்கத்தை உண்டாக்கி உள்ளது.