Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன?
சென்னை: சென்னை புளியந்தோப்பில் உள்ள அரசு பள்ளியின் மறுதிறப்பு விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் ஆர்.கே.நகர் தொகுதி தவெக எம்எல்ஏ பல்லவி இடையே ஏற்பட்ட நேரடி மோதல் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சென்னையில் தங்களது செல்வாக்கை நிலைநாட்ட முயற்சிக்கும் புதிய சக்தியான தமிழக வெற்றிக் கழகத்துக்கும் (TVK), பாரம்பரிய அதிகார மையமான திமுகவுக்கும் இடையிலான 'ஈகோ யுத்தம்' இன்னும் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிகழ்வின் போது குத்துவிளக்கேற்றும் சடங்கு நடைபெற்றது. மேயர் பிரியா பள்ளி திறப்பு விழாவில் ரிப்பன் வெட்டி உள்ளார். அதன்பின் நடந்த நிகழ்வும் மீளுவர்த்தி ஏற்றும் போது அதை மேயர் கொடுக்க.. தவெக எம்எல்ஏ பல்லவி வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த பள்ளி நிகழ்வில் மேயர் பிரியா ரிப்பன் வெட்டும் போது குறுக்கே புகுந்து தவெக எம்எல்ஏ பல்லவி ரிப்பன் வெட்டி உள்ளார். அந்த நிகழ்வில் மேயர் பிரியாவிடம் இருந்த மெழுகுவர்த்தியை விளக்கேற்றுவதற்காக தவெக எம்எல்ஏ பல்லவி தன் கையை நீட்டினார்.

ஆனால் மேயர் பிரியா அவரது கையைத் தவிர்த்துவிட்டு அருகில் நின்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் நேரடியாக மெழுகுவர்த்தியை கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ பல்லவி உடனடியாக விழாவை புறக்கணித்து வெளியேறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய பல்லவி, "ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதாக நினைத்துக்கொண்டு திமுகவினர் இன்னும் ஆணவத்தோடும் திமிரோடும் செயல்படுகிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, "இங்கு யாருக்கும் அவமரியாதை செய்யப்படவில்லை. அரசு நெறிமுறைகளின்படி (Protocol) மேயர் மற்றும் அமைச்சர்களுக்கு அடுத்த நிலையில் சில அரசு நிகழ்வுகளில் அதிகாரிகளுக்கு முன்னுரிமை உண்டு. அதன்பின்தான் எம்எல்ஏ. புரோட்டோகால் புரியாமல் தேவையின்றி அரசியலாக்குகிறார்கள்" என்று தெளிவுபடுத்தினார்.
மேயர் vs எம்எல்ஏ - யார் பெரியவர்?
இந்த சம்பவம் ஒரு நகருக்குள் அதிகாரப் படிநிலையில் மேயர் பெரியவரா அல்லது எம்எல்ஏ பெரியவரா எனும் விவாதத்தை மக்கள் மத்தியில் தீவிரப்படுத்தியுள்ளது. அரசியல் நெறிமுறைப்படி, ஒரு மாநகராட்சி எல்லைக்குள் மேயர் "நகரத்தின் முதல் குடிமகன்" (First Citizen of the City) என்ற அந்தஸ்தைப் பெறுகிறார். மாநகராட்சி நடத்தும் உள்ளாட்சி விழாக்களில் மேயருக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஆனால், எம்எல்ஏ மாநில சட்டமன்ற உறுப்பினர் என்பதால் மாநில அளவில் சட்டம் இயற்றும் அதிகாரமும், நிதி ஒதுக்கீட்டில் செல்வாக்கும் கொண்டவர். ஒரு தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக அவரை புறக்கணிக்க முடியாது என்பது அரசியல் நிபுணர்களின் கருத்து.
இந்திய அரசு நெறிமுறைப் பட்டியலின்படி உள்ளாட்சி நிகழ்வுகளில் மேயருக்கு முன்னுரிமை இருந்தாலும், அரசியல் யதார்த்தத்தில் எம்எல்ஏ-க்களுக்கு அதிக செல்வாக்கு உண்டு. புளியந்தோப்பு சம்பவம் வெறும் புரோட்டோகால் பிரச்சினை அல்ல, சென்னையில் திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையேயான அதிகாரப் போட்டியின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் கள யதார்த்தம் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால், கலெக்டரை விட எம்.எல்.ஏ (MLA)-வே அதிக அதிகாரமும் முன்னுரிமையும் கொண்டவர்.
ஏனெனில், இந்திய ஜனநாயக அமைப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே (Legislature) நிரந்தர அரசு அதிகாரிகளுக்கு (Executive) மேல் மட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்
கோட்டை வட்டாரங்கள் கூறுவதாவது: "2026 தேர்தலுக்குப் பிறகு சென்னையில் புதிய அரசியல் மோதல் உருவாகி வருகிறது. தவெக தனது தொகுதிகளில் வலுவான அடித்தளத்தை உருவாக்க முயற்சிக்க, திமுக மாநகராட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த மோதல் வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையும்" என எச்சரிக்கின்றன.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. மக்கள் இந்த அதிகார யுத்தத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications