தீவிரப் புயலாக மாறும் ஃபனி.. சென்னையில் இன்றிரவு கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை
Recommended Video
சென்னை: சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக நேற்று மாறியது. இதற்கு ஃபனி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஃபனி புயலின் திசை மற்றும் செயல்பாடு குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கினார்.
ஃபனி.. இன்று அதிதீவிர புயலாக மாறும்.. சென்னையிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா?
ஏப்ரல் 30
அப்போது அவர் கூறுகையில் ஃபனி புயல் நேற்றைய தினம் புயலாக மாறியுள்ளது. இது வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி, மே 1-ஆம் தேதி வடதமிழகம்- தென் ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும்.
புயல் திசை
இதனால் வடதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு. அது போல் சென்னையிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. மே 1-ஆம் தேதிக்கு பிறகு புயல் திசை மாறி வடகிழக்கு நோக்கி நகரத் தொடங்கும்.
தமிழகத்தில் கரையை
இந்த புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 1050 கி.மீ.தூரத்தில் உள்ள புயல் தமிழக கடற்கரையை 300 கி.மீ. வரை நெருங்கும். புயல் வடகிழக்கு பகுதியில் நகர்வதால் தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்பில்லை.
கரை திரும்ப அறிவுரை
இன்று இரவு இந்த ஃபனி தீவிர புயலாக மாறும். அடுத்த 2 நாட்களில் ஃபனி அதி தீவிர புயலாக மாறும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றார் பாலச்சந்திரன்.