Cyclone Fani: ஃபனி புயல்.. தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்
Recommended Video
சென்னை: தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது.
தெற்கு கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் நேற்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று மாறியுள்ளது. இது இன்னும் 36 மணி நேரத்துக்குள் ஃபனி புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஃபனி புயலாக உருவெடுக்கும். இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
ஃபனி புயல் வருவதற்கு முன்பே சூறைக்காற்று.. நெல்லை, விருதுநகரில் கனமழை.. மரங்கள் விழுந்தது!
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இதுகுறித்து சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில் சென்னைக்கு 1500 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏப்ரல் 27, 28-ஆம் தேதி புயலாக மாறும்.
கனமழை
அவ்வாறு உருவானால் வடதமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளது. எனவே ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் புயலாக மாறும். இந்த தேதிகளில் கனமழை பெய்யும் என்றார்.
எச்சரிக்கை
மேலும் ஏப்ரல் 30 மற்றும் மே 1-ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த இரு தினங்களுக்கு தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ரெட் அலர்ட் ஏன்
மீனவர்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம். மிக கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றார் பாலசந்திரன்.