வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை... மீனவர்களுக்கு எச்சரிக்கை... வானிலை மையம்!
Recommended Video
சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கிய முதல் வாரம் தென் தமிழகம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் நல்ல மழை பெய்தது. எனினும் கடந்த 2 தினங்களாக மழை அவ்வளவாக இல்லை. நவம்பர் 6ல் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன் அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. குமரிக்கடல், மத்திய இந்திய பெருங்கடலுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
[தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள்... புறநகர்களில் போக்குவரத்து நெரிசல்!]
நவம்பர் 7,8 தேதிகளில் கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று 2 தினங்களுக்கு முன்னரே வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.