சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்ட புரேவி புயல் நேற்று மாலை வலுவிழந்தாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரேவி புயல் பாம்பனுக்கு தென்மேற்கே 20 கி.மீ. தூரத்தில் இருந்தது. இது நேற்று மாலை 5.30 மணிக்கு வலுவிழந்தது.

Chennai Meteorological Department says that Burevi cyclone weakens to Deep depression

புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது ராமநாதபுரம்- தூத்துக்குடி இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும். இதனால் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். மன்னார் வளைகுடா, தென் தமிழகத்தில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

புரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறைபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும். காற்றின் திசையால் மத்திய பகுதிக்கு மேகக் கூட்டங்களால் மழை பெய்கிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்த புரேவி புயல் நேற்று இரவோ அல்லது இன்று அதிகாலையோ பாம்பன்- கன்னியாகுமரி இடையே பாம்பன் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai Meteorological Department says that Burevi cyclone weakens to Deep depression and it will landfall near Ramanthapuram- Tuticorin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X