சென்னையில் லேசான மழை.. உள்மாவட்டங்களில் அதிக உஷ்ணம்.. இதுதான் ஃபனியின் ஃபாலோ அப்!
சென்னை: சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு என்றும் உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
ஃபனி புயல் ஒடிஸாவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
10 ஆண்டில் 8 அடி கடலுக்குள் போன இந்தோனேசியா.. மொத்தமாக மூழ்கும் அபாயம்.. தலைநகரை கைவிட முடிவு
மீனவர்கள்
உச்ச புயலாக உருவெடுத்துள்ள இந்த ஃபனி சென்னையிலிருந்து 420 கி.மீ.தூரத்தில் நிலைகொண்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
கடலோர மாவட்டங்கள்
மே 4-ஆம் தேதி முதல் உள்மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மே 4-ஆம் தேதிக்கு பிறகு கடலோர மாவட்டங்களில் வெப்பம் குறையும்.
சீசன்
ஒடிஸா மாநிலத்தில் நாளை மறுநாள் பூரி அருகே ஃபனி கரையை கடக்கிறது. ஃபனி காரணமாக வங்கக் கடலில் காற்று பலமாக வீசக்கூடும். புயல் சின்னம் உருவாகும் சீசன்தான் இது. அடுத்த புயல் சின்னம் எப்போது உருவாகும் என கூற முடியாது.
வெப்பநிலை
சென்னையில் நேற்று சிறிது நேரம் மட்டும் 104 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவானது. வடக்கிலிருந்து வரும் வாடை காற்று வெப்பத்துடன் வீசியதே வெப்பநிலை அதிகரிக்க காரணம் என்றார் புவியரசன்.