அனல் வீச போகுது.. 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.. வெளியே வராதீங்க.. வானிலை மையம் அட்வைஸ்
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது
Recommended Video
சென்னை: வெயில் கொடுமையில் இருந்து மீளமுடியாமல் மக்கள் இன்னமும் தவித்து வருகின்றனர். அனல் தாங்க முடியாமல் புழுக்கத்தில் வெந்து போயுள்ளனர். அதிலும் 13 மாவட்டங்களில் இன்று வெப்பம் அதிகரிக்கும் என்ற பீதி தகவலை வானிலை மையம் தெரிவித்து, எச்சரித்துள்ளது.
அக்னி போயாச்சு என்று சொன்னாலும், அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரிதான் இருக்கு. கோடை மழையும் இல்லை, புயல் மூலமா மழை வரும்னு நினைச்சா, வர்ற புயல்கூட வேற பக்கமா போயிடுது. வெப்பநிலை அதிகரித்தவாறே காணப்படுகிறது.
தென் மேற்கு பருவமழை துவங்கினாலும் ஒரு வாரம் மட்டும்தான் தென் மாவட்டங்களில் பெய்தது. அரபிக் கடலில் எப்போது 'வாயு' புயல் உருவானதோ, அப்போதே தென் மேற்கு பருவமழை நின்று போய்விட்டது!
இப்போது, சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், மதுரை, திருச்சி, அரியலூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது மட்டுமில்லை, பயங்கரமான அனல் காற்று வீசுமாம். இதனால் முடிந்த அளவுக்கு வீட்டை விட்டு யாரும் வெளியே வராதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அடுத்த இரு தினங்களுக்கு இயல்பைவிட 4 முதல் 5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று பகீர் விஷயத்தையும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வாயு புயல் கரையை கடந்த பின்புதான், தமிழகத்தில் மழை தீவிரம் அடைந்து வெப்ப நிலை குறையும் என கூறப்படுகிறது. அதனால் ஒரு பக்கம் வெப்பம், மறுபக்கம் தண்ணீர் பஞ்சத்தில் தமிழகம் சிக்கிக் கொண்டுள்ளது.
துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு