தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த இரு தினங்களில் வலுவாக இருந்த நிலையில் அடுத்த இரண்டு தினங்களை பொறுத்தவரையில் குறைவாக பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்தது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திராவை நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் மழை குறைந்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த இரு தினங்களில் வலுவாக இருந்தது. ஆனால் அடுத்து வரும் இரண்டு தினங்களை பொறுத்தவரையில் முந்தை இரண்டு நாட்களை ஒப்பிடும் போது குறைவாகவே பெய்யும்.
கிடுகிடுவென உயர்ந்தது.. காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மழை அளவு
கடந்த அக்டோபர் 1 முதல் அக்டோபர் 23ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெய்த மழையின் அளவு 130 மில்லி மீட்டர். இந்த காலக்கட்டத்தில் இயல்பான மழை அளவு 126 மில்லி மீட்டர். இது இயல்பை விட 3 சதவீதம் அதிகம் ஆகும்
காற்றழுத்த தாழ்வு பகுதி
நேற்று மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திர கடல் பகுதியில் நிலவுகிறது.
மழை எப்படி இருக்கும்
அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நிலவுகிறது. அரபிக்கடல் காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து எப்படி நகரும் என்பதை பொறுத்து தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு தெரியவரும்.
டெல்டாவில் கனமழை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழக மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்தது. அதிபட்சமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 9 செ.மீ மழை பதிவானது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் ( தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர்) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
பாலசந்திரன் தகவல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் நகரின் சிலப்பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்" இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.