சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இறங்கி வந்த நிர்வாகம்.. 3 நாளுக்கு பின் சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

Google Oneindia Tamil News

சென்னை: நீக்கப்பட்ட 8 ஊழியர்களையும் பணியில் சேர்ப்பது குறித்து அந்த ஊழியர்கள் அப்பீல் செய்தால் பரிசீலிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் இறங்கி வந்ததால் வேலைநிறுத்தத்தை மெட்ரோ ரயில் ஊழியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரியும் ஊழியர்களின் நலனுக்காக 3பேர் தொழில்நுட்ப பணியாளர்கள், ஸ்டேசன் கண்ட்ரோலர்கள் 2பேர் டிராபிக் கண்ட்ரோலர்கள் மற்றும் ஒரு ஜுனியர் என்ஜினியர் உள்பட 8 பேர் சேர்ந்து தொழிலாளர் நல சங்கத்தை ஆரம்பித்ததாக குற்றம்சாட்டி அவர்களை பணியில் இருந்து நீக்கியது மெட்ரோ ரயில் நிர்வாகம்ட.

இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கணக்கான மெட்ரோ ரயில் ஊழியர்கள், கடந்த 3 நாட்களாக காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 8 ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்தால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் என அறிவித்தனர்.

"விவசாயத்த மட்டும் அழியாம பாத்துக்கோங்க"... ஸ்டாலினை அதிரவைத்த தூத்துக்குடி பெண்

ரயில் சேவை பாதிப்பு

ரயில் சேவை பாதிப்பு

இதனால் கடந்த 3 நாட்களாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்காலிக பணியாளர்களை கொண்டு மெட்ரோ ரயில்களை இயக்கி வருகிறது மெட்ரோ நிர்வாகம்

முத்தரப்பு பேச்சுவார்த்தை

முத்தரப்பு பேச்சுவார்த்தை

இதனிடையே சென்னை தொழிலாளர் நல அலுவலகத்தில், மெட்ரோ ரயில் நிர்வாகம், தொழிற்சங்கத்தின்ர், தொழிலாளர் நல ஆணையம் ஆகியோர் அடங்கிய அமர்வு, மெட்ரோ ரயில் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்திவ வந்தனர்.

மெட்ரோ நிர்வாகம்

மெட்ரோ நிர்வாகம்

நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நல சங்கம் தொடங்கியதால் பணிநீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்தது., அதனால் பேச்சுவார்த்தை நேற்று தோல்வி அடைந்தது

போராட்டம் வாபஸ்

போராட்டம் வாபஸ்

இதனிடையே தொழிலாளர் தினமான இன்று மாலை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தொழிலாளர் நல ஆணையர், மெட்ரோ நிர்வாக அதிகாரிகளிடம் பேசி 8 ஊழியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுவது தொடர்பாக பரிசீலிக்கும் மாறு சமரசம் செய்தனர்.இதையடுத்து மெட்ரோ ரயில் நிர்வாகம் நீக்கப்பட்ட 8 ஊழியர்களையும் பணியில் சேர்ப்பது குறித்து அந்த ஊழியர்கள் அப்பீல் செய்தால் பரிசீலிக்கப்படும் என பேச்சுவார்த்தையில் தெரிவித்தது. இதையேற்று மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.நாளை முதல் பணிக்கு திரும்புவதால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை வழக்கம் போல் இருக்கும்.

English summary
Chennai metro rail employees withdraw strike after 3 days , over eight employees who were terminated by mero management
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X