வகுப்பறையிலேயே தற்கொலை செய்த ஆசிரியர், சென்னை நீலாங்கரையில் மாணவர்கள் அதிர்ச்சி
சென்னை: சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையிலேயே தூக்கில் தொங்கியதால், மாணவ- மாணவிகள் கதறி அழுதனர்.
சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இன்று காலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர்.
அங்கு 8ம் வகுப்பு அறையில் ஆசிரியர் அந்தோணி ஜெனிபர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். வகுப்பறையில் ரத்தம் சிதறி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் கதறி அழுதனர். மாணவர்களின் சத்தம் கேட்டு அங்கு வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதுகுறித்து நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார், தூக்கில் பிணமாக தொங்கிய அந்தோணி ஜெனிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சொன்னபடி செஞ்சது பாஜக! அதனால மோடியை எதிர்க்கல.. அய்யாக்கண்ணு பேட்டி
உயிரிழந்த ஆசிரியர் அந்தோணி ஜெனிபர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருமணம் ஆகாத இவர், பள்ளியிலேயே தங்கி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர், 8-ம் வகுப்பு, 9- ம் வகுப்புக்கு பாடம் நடத்தியதும், 8ம் வகுப்பு வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் வேறு பள்ளியில் இன்று தேர்வை எழுதினர். ஆசிரியர் அந்தோணி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.