சென்னை சொகுசு பாரில் ராத்திரியில் 'அந்த' நடனம்.. சுற்றி வளைக்கப்பட்ட பெண்கள்.. போலீஸ் அதிரடி
சென்னை: சென்னை ராஜமங்கலத்தில் உள்ள தனியார் சொகுசு பாரில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதாக விடுதி மேலாளரை போலீசார் கைது செய்தனர். 12 அழகிகளை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
Recommended Video
சென்னை ராஜமங்கலம் 200 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான மதுபான சொகுசு பார் இயங்கி வருகிறது. இங்கு ஆபாச நடன நிகழ்ச்சி நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அண்ணாநகர் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை போலீசார், அந்த சொகுசு பாரின் உள்ளே அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.
ஆபாச நடனம்
அப்போது அங்கு, ‘கரோக்கி' என்ற ஒரு வகையான பாடலுக்கு ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் மதுபோதையில் நடனமாடி கொண்டிருந்தனர். சில பெண்கள், மேடையில் அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடனம் ஆடியபடி இருந்ததாக கூறப்படுகிறது.
ஆபாச நடன நிகழ்ச்சி
அங்கிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் உரிய அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அந்த மதுபான சொகுசு பாரின் மேலாளர் எரிக்கன்சேரி பகுதியை சேர்ந்த அகமது பைசலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
போதைப்பொருள் பயன்பாடு
அங்கு ஆபாசமாக நடனமாடிய 12 பெண்களை மீட்டு பெரவள்ளூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுபோல் அனுமதி இன்றி வேறு எந்த சொகுசு பார்களிலாவது ஆபாச நடன நிகழ்ச்சி நடைபெறுகிறதா? என போலீசார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். போதை பொருள் ஏதேனும் பயன்படுத்தினார்களா என்ற விசாரணையையும் நடத்தி வருகின்றனர்.
நடனம் நடைபெறுகிறதா
சென்னையில் கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி போன்ற பகுதிகளில் சொகுசு பார்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் அதிகளவில் உள்ளது. அங்கு இதுபோன்ற ஆபாச நடனங்கள் நடைபெறுகிறதா? என போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.