சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் தொடர்பாக போலீஸ் வழக்குப் பதிவு

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் தொடர்பாக போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதை சென்னை கமிஷனர் மகேஷ் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

Chennai police files case against the one who threatens Vijay Sethupathis daughter

இந்த படத்திலிருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும், தமிழ் ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் இந்த படத்திலிருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்தார்.

கடைசி வரை.. விஜய் சேதுபதி பட விவகாரத்தில் வாயே திறக்கலையே திமுக.. ஏன்? கடைசி வரை.. விஜய் சேதுபதி பட விவகாரத்தில் வாயே திறக்கலையே திமுக.. ஏன்?

இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளங்களில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார். இதை கனிமொழி, பிரேமலதா, குஷ்பு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தார்கள்.

Chennai police files case against the one who threatens Vijay Sethupathis daughter

இந்த நிலையில் சமூகவலைதளங்களில் அவதூறாக பேசியவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

English summary
Chennai Police files case against Social media activist who threatened Vijay Sethupathi's daughter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X