சென்னையில் பல்வேறு இடங்களில் திடீரென கொட்டிய கனமழை.. மக்கள் மகிழ்ச்சி
சென்னை: சென்னையில் இன்று காலை திடீரென பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இன்று காலை சென்னையின் ஈக்காட்டுத்தாங்கல், சூளைமேடு, ராயபுரம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது
இதேபோல் போரூர், விருகம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
மேலும் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், மெரினா உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இந்த மழையால் சென்னை குளுகுளு நகராக மாறியது.
இந்நிலையில் சென்னையில் லேசானது முதல் மிதமான மழை ஓரிரு மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.