சென்னைக்கு அடுத்ததாக கோவையில் கொரோனா உக்கிரம்- ஒரேநாளில் 581 பேருக்கு பாதிப்பு
சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்ததாக கோவையில் ஒரேநாளில் 581 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தமிழகத்தைவிட அதிகம்.
சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கோவையிலும் கொரோனா பாதிப்பு 500 ஐ தாண்டியதாகவே உள்ளது.
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 71
- செங்கல்பட்டு 384
- சென்னை- 1084
- கோவை- 581
- கடலூர்- 286
- தருமபுரி- 10
- திண்டுக்கல் - 111
- ஈரோடு - 90
- கள்ளக்குறிச்சி- 209
- காஞ்சிபுரம் - 191
- கன்னியாகுமரி - 153
- கரூர்- 33
- கிருஷ்ணகிரி- 63
- மதுரை- 128
- நாகப்பட்டினம் - 85
- நாமக்கல் - 74
- நீலகிரி - 46
- பெரம்பலூர்- 33
- புதுக்கோட்டை- 95
- ராமநாதபுரம்- 40
- ராணிப்பேட்டை- 182
- சேலம் - 335
- சிவகங்கை - 37
- தென்காசி - 49
- தஞ்சாவூர்- 132
- தேனி- 55
- திருப்பத்தூர்- 39
- திருவள்ளூர்- 296
- திருவண்ணாமலை- 154
- திருவாரூர் - 99
- தூத்துக்குடி- 65
- நெல்லை- 152
- திருப்பூர்- 87
- திருச்சி - 98
- வேலூர்- 137
- விழுப்புரம்- 166
- விருதுநகர்- 67
Comments
English summary
Chennai 1084; Coimbatore 581 Positivies for Corona on Tuesday. Here is the District wise abstract of Coronavirus cases on today.