சென்னையில் மீண்டும் அதிகரிப்பு- 1187 பேருக்கு பாதிப்பு- வடமாவட்டங்களில் தொடரும் விஸ்வரூபம்!
சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமாவட்டங்களான செங்கல்பட்டில் 437 பேருக்கும் திருவள்ளூரில் 495 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 321 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் - அதாவது ஆக்டிவ் கேஸ்களில் தமிழகம் 4-வது இடத்தில்தான் இருக்கிறது.
தமிழகத்தில் சென்னையில் ஆயிரக்கணக்கில் கொரோனா பாதிப்பு இருந்த நிலை கடந்த சில நாட்களாக மாறி 1,000க்கும் கீழ் பாதிப்பாக இருந்தது. ஆனால் இன்று சென்னையில் மீண்டும் 1,000-த்தை தாண்டியுள்ளது கொரோனா பாதிப்பு.
இதேபோல் வடமாவட்டங்களிலும் மீண்டும் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகரித்திருக்கிறது. தமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்:
தமிழகத்தில் ஒரேநாளில் 5,890 பேருக்கு கொரோனா- 117 பேர் மரணம்; 5,556 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 69
- செங்கல்பட்டு 437
- சென்னை- 1187
- கோவை- 385
- கடலூர்- 221
- தருமபுரி- 39
- திண்டுக்கல் - 138
- ஈரோடு - 128
- கள்ளக்குறிச்சி- 30
- காஞ்சிபுரம் - 315
- கன்னியாகுமரி - 128
- கரூர்- 14
- கிருஷ்ணகிரி- 12
- மதுரை- 46
- நாகப்பட்டினம் - 34
- நாமக்கல் - 30
- நீலகிரி - 18
- பெரம்பலூர்- 24
- புதுக்கோட்டை- 155
- ராமநாதபுரம்- 57
- ராணிப்பேட்டை- 178
- சேலம் - 191
- சிவகங்கை - 70
- தென்காசி - 93
- தஞ்சாவூர்- 88
- தேனி- 367
- திருப்பத்தூர்- 63
- திருவள்ளூர்- 495
- திருவண்ணாமலை- 81
- திருவாரூர் - 56
- தூத்துக்குடி- 60
- நெல்லை- 117
- திருப்பூர்- 53
- திருச்சி - 106
- வேலூர்- 178
- விழுப்புரம்- 127
- விருதுநகர்- 90