சென்னையில் 1298 பேருக்கு கொரோனா- கோவையில் 392, கடலூரில் 380 பேருக்கு பாதிப்பு!
சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 1298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவையில் அதி உச்சமாக 392 பேருக்கும் கடலூரில் 380 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
மத்திய அரசின் இ பாஸ் முறை தளர்வுக்கு தமிழகம் எதிர்ப்பு - சுகாதாரத்துறைக்கு பெரும் சவால்: அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் 24 மணி நேரத்தில் மொத்தம் 5,975 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 6,047 பேர் 24 மணிநேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 97 பேர் 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர்.
மாவட்டங்களில் சென்னையில்தான் அதிக அளவாக 1298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கோவையில் மிக அதிகமாக 392 பேருக்கும் கடலூரில் 380 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 5,975 பேருக்கு கொரோனா; 6,047 பேர் டிஸ்சார்ஜ்; 97 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 64
- செங்கல்பட்டு 352
- சென்னை- 1298
- கோவை- 392
- கடலூர்- 380
- தருமபுரி- 12
- திண்டுக்கல் - 178
- ஈரோடு - 45
- கள்ளக்குறிச்சி- 93
- காஞ்சிபுரம் - 222
- கன்னியாகுமரி - 181
- கரூர்- 49
- கிருஷ்ணகிரி- 19
- மதுரை- 105
- நாகப்பட்டினம் - 22
- நாமக்கல் - 47
- நீலகிரி - 87
- பெரம்பலூர்- 30
- புதுக்கோட்டை- 155
- ராமநாதபுரம்- 38
- ராணிப்பேட்டை- 155
- சேலம் - 261
- சிவகங்கை - 43
- தென்காசி - 140
- தஞ்சாவூர்- 116
- தேனி- 170
- திருப்பத்தூர்- 53
- திருவள்ளூர்- 354
- திருவண்ணாமலை- 100
- திருவாரூர் - 29
- தூத்துக்குடி- 91
- நெல்லை- 158
- திருப்பூர்- 75
- திருச்சி - 97
- வேலூர்- 180
- விழுப்புரம்- 160
- விருதுநகர்- 10
English summary
Chennai 1298 Positivies for Corona on Sunday. Here is the District wise abstract of Coronavirus cases on Sunday
Story first published: Sunday, August 23, 2020, 18:40 [IST]