மரண அடி என்றால் அது இதுதான்.. மு.க.ஸ்டாலின் அதிரடி அறிக்கை
Recommended Video
சென்னை: சென்னை - சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் அதிமுக அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை-சேலம் நடுவேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து சாலை திட்டம் செயல்படவிருந்த 5 மாவட்ட விவசாயிகளும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடி வருகிறார்கள்.
தீர்ப்பால் சந்தோஷத்தில் அன்புமணி.. சங்கடத்தில் எடப்பாடி, வருத்தத்தில் பாஜக
இதனிடையே, திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், சென்னை - சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் அதிமுக அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டேன் என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். 8வழிச்சாலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை தமிழக அரசு மதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
#SalemChennaiExpressWay விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை மதிக்காத எடப்பாடி அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரணஅடி கொடுத்திருக்கிறது!
— M.K.Stalin (@mkstalin) April 8, 2019
அதிமுக அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யாது என்ற வாக்குறுதியை, வழக்கு போட்ட பாமக பெற்றுத்தருமா?
தவறினால், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுமா? pic.twitter.com/dKDlrMHgwX
ட்விட்டரில் ஸ்டாலின் இதுகுறித்து கூறியுள்ளதாவது: சென்னை சேலம் எக்ஸ்பிரஸ் சாலை, விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை மதிக்காத எடப்பாடி அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரணஅடி கொடுத்திருக்கிறது! அதிமுக அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யாது என்ற வாக்குறுதியை, வழக்கு போட்ட பாமக பெற்றுத்தருமா? தவறினால், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுமா? இவ்வாறு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.