சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உயிரை பறித்த இன்ஸ்டாகிராம் காதல்! காதலனை சந்திக்க சென்னை வந்த பெண் தற்கொலை

Google Oneindia Tamil News

Recommended Video

    Instagram Love:காதலனை சந்திக்க சென்னை வந்த பெண் தற்கொலை-வீடியோ

    சென்னை: இன்ஸ்டாகிராம் காதலனை சந்திக்க இலங்கையில் இருந்து சென்னை வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இலங்கையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் மலர்மேரி வயது 22. காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த அவினாஷ். இவர் அந்த பகுதியில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

    மலர்மேரி மற்றும் அவினாஷ் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அதன் பிறகு காதலர்களாக மாறியுள்ளனர். இருவரும் 7 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    வாலாட்டி குருவியை பார்த்தால் காதல் ஜெயிக்கும்... புதையல் கிடைக்கும் - வராஹமிகிரர் வாலாட்டி குருவியை பார்த்தால் காதல் ஜெயிக்கும்... புதையல் கிடைக்கும் - வராஹமிகிரர்

    காதலனை சந்திக்க முடிவு

    காதலனை சந்திக்க முடிவு

    இந்நிலையில் மலர்மேரி தனது காதலன் அவினாஷை சந்திக்க விரும்பினார். இதற்காக அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். மலர்மேரி சென்னை வந்ததும் அவினாஷ் அவரை ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்க வைத்துள்ளார்.

    உற்சாகமான ஜோடி

    உற்சாகமான ஜோடி

    இதையடுத்து இந்த காதல் ஜோடி சென்னையின் பல இடங்களை ஜாலியாக சுற்றிப்பார்த்துள்ளனர். இதையடுத்து தன் காதலி மலர் மேரியை கடந்த 25ம் தேதி இலங்கைக்கு திருப்பி அனுப்ப அவினாஷ் முடிவு செய்தார்.

    மறுத்த காதலி

    மறுத்த காதலி

    ஆனால் காதலன் அவினாஷ் உடன் பல இடங்களை சுற்றிய சந்தோஷத்தில் இருந்த மலர்மேரி அவரை விட்டு பிரிந்து செல்ல மறுத்துவிட்டாராம். ஆனால் அவினாஷ் விமான டிக்கெட் எடுத்துவந்துள்ளார். எனினும் மலர்மேரி காதலனை விட்டு பிரிய மறுத்துவிட்டார். இதையடுத்து காதலியை லாட்ஜிலேயே தங்க வைத்துவிட்டு நேற்று முன்தினம் காலையில் அவினாஷ் வேலைக்கு கிளப்பிவிட்டாராம்.

    காதலி தற்கொலை

    காதலி தற்கொலை

    இந்நிலையில் மலர்மேரி தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் அறையின் கதவை தட்டிப்பார்த்து திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மலர்மேரி தூக்கிட்டு பிணமாக தொங்கியுள்ளார்.

    விசாரணை

    விசாரணை

    தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், மலர்மேரியின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இலங்கை பெண் மலர்மேரி தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து காதலன் அவினாஷ்சிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Sri Lankan girl suicide after She met her instagram lover in chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X