தாம்பரம் முதல் கடற்கரை ரயில்கள் கோடம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்.. பயணிகள் அவதி
சென்னை: தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக கோடம்பாக்கம் வரை மட்டும் இயக்கப்படுவதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்..
சென்னை எழும்பூர் -பல்லாவரம் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் இன்று ரயில்சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே காலை 10.30, 10.40, 10.50, முற்பகல் 11.10, 11.20, 11.30, 11.40, மதியம் 12, 12.10, 1.15, 1.30, 2, 2.30 ஆகிய மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
இதேபோல் சென்னை கடற்கரை -செங்கல்பட்டு, அரக்கோணம் செல்லும் ரயில்களும் இன்று மதியம் வரை ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
இதேபோல் சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரை இயக்கப்படும் ரயில்கள் கோடம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது பராமரிப்பு பணி காரணமாக விரைவுப்பாதையில் சில சேவைகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
இதேபோல் மறு மார்க்கமாக கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரை விரைவு ரயில்கள் செல்லும்பாதையில் ரயில்கள் குறைவான சேவைகளே இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பயணிகளின் வசதிக்காக கடற்கரை -கோடம்பாக்கம் இடையே மட்டும் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.