சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை.. 5 மாவட்டங்களில் புரட்டி எடுத்தது.. 6 மணிநேரத்தில் 14 செ.மீ மழை
Recommended Video
சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாகி உள்ளன. 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை படுதீவிரமடைந்துள்ளது. சென்னை நகரில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.
சென்னை புறநகரில் விடிய விடிய பெய்த மழையால் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை தாம்பரத்தில் 6 மணிநேரத்தில் 14 செ.மீ மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கனமழையால் காஞ்சிபுரம், திருவள்ளூர்,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.