சென்னை தியாகராய நகர் பகுதியில் புதிய மாற்றங்கள்.. சாலைகள் ஒரு வழிப்பாதையாக அறிவிப்பு
Recommended Video
சென்னை: சென்னை தியாகராய நகர் பகுதி இன்று முதல் ஒருவழிப்பாதையாக மாறியுள்ளது. எந்த சாலையில் எப்படி செல்ல வேண்டும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
சென்னை தியாகராய நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அந்த பகுதியை ஒருவழிப்பாதையாக மாற்றி சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. இந்த திட்டம் இன்று முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
சென்னை மாநகரத்தின் முதல் பாதசாரி நடைப்பாதை பாண்டிபஜாரில் திறக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தியகராய நகரில் திய போக்குவரத்து ஏற்பாடுகளை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறையில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பனகல் பார்க் வரை
தியாகராய நகர் பகுதி வியாழக்கிழமை (நவம்பர் 14) முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இதன்படி அண்ணாசாலையில் இருந்து பனகல் பூங்கா நோக்கி செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை சந்திப்பு வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
வெங்கட்நாராயணா சாலை
மேலும் பனகல் பூங்கா செல்ல விரும்பும் வாகனங்கள், தணிகாசலம் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, தணிகாசலம் சாலை வழியாக சென்று, வெங்கட்நாராயணா சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி பனகல் பூங்கா நோக்கி செல்லலாம்.
மா.பொ.சிவஞானம் சிலை
இதேபோல் பனகல் பூங்காவில் இருந்து அண்ணா சாலை சந்திப்புக்கு செல்ல வேண்டிய வாகனங்கள், பிரகாசம் சாலை, ஜிஎன் செட்டி சாலை சென்று அங்கிருந்து வாணி மகால் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, டாக்டர் நாயர் சாலை வழியாக தியாகராய சாலையில் இடது புறம் திரும்பி மா.பொ.சிவஞானம் சிலை வழியாக இனி அண்ணா சாலை செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல அடுக்கு வாகன நிறுத்தம்
இதனிடையே மூன்று மாதங்களில் தானிகாச்சலம் சாலை-தியாகராயா சாலை சந்திப்பில் பல நிலை வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்ட பின்னர் மீண்டும் பார்க்கிங் ஏற்பாடுகள் திருத்தப்பட உள்ளது. பாண்டி பஜார் அருகே தெருக்களில் பார்க்கிங் செய்வது விரைவில் இறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.