கனமழையால் நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை: தொடர்ந்து கனமழை பெய்த காரணமாக நாளை(திங்கள்கிழமை) நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இடைவிடாமல் கனமழை பெய்து வரும் காரணத்தால் இயல்பு வாழ்க்கை இன்று பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தண்ணீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி உள்ளது.
இந்நிலையில் தொடர்மழை காரணமாக நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அப்பாடா.. சொல்லீட்டாங்கப்பா.. நாளை சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு.. கனமழையால் அறிவிப்பு
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாண்டியன் அறிவித்துள்ளார். இதனிடையே சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
heavy rain: Chennai University postponement of tomorrow exams
Story first published: Sunday, December 1, 2019, 21:12 [IST]