சென்னையை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம்.. சமாளிக்க முடியல.. 4000 ஹோட்டல்களை மூட முடிவு!
Recommended Video
சென்னை: சென்னையை ஆட்டிப்படைக்கும தண்ணீர் பஞ்சத்தால் 4000 ஹோட்டல்களை மூட அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் திடீரென உயர்ந்தது.
இதன்தொடர்ச்சியாக கடந்த 4 ஆண்டுகளாக சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை என்ற பேச்சே இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
"வண்டியை ஓரங்கட்டுங்க.. போட்டோ எடுங்க இவரை.. ஏன் ஹெல்மட் போடல?".. அதிர வைத்த இணை கமிஷனர்
4000 ஹோட்டல்கள் மூட முடிவு
தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக சென்னையில் 4000 ஹோட்டல்களை மூட ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மதிய சாப்பாடு நிறுத்தம்
ஏற்கனவே சென்னை நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான உணவகங்கள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. பல மதிய சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.
வெளியூர் இளைஞர்கள்
சென்னையில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பணி நிமித்தமாக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தனியாக வீடு எடுத்தும் தங்கும் விடுதிகளிலும் தங்கியுள்ளனர்.
உணவங்களை நம்பியே
அவர்களின் பசியை போக்குவது உணவகங்கள்தான். ஒருநாள் உணவகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலே அவர்களின் நிலைமை திண்டாட்டம் ஆகிவிடும்.
சமாளிக்க முடியவில்லை
இந்நிலையில் சென்னையில் மேலும் 4000 ஹோட்டல்கள் மூடப்படும் என தகவல் வெளியாகியிருப்பது பலரின் வயிற்றில் புளியை கரைக்க தொடங்கியுள்ளது. உணவகங்களில் உள்ள மோட்டார்களில் தண்ணீர் வராத நிலையில் தனியார் தண்ணீர் லாரிகளுக்கும் தற்போது கிராக்கி ஏற்பட்டுள்ளதால் உணவக உரிமையாளர்கள் இந்த முடிடிவ எடுத்துள்ளனர்.