ஆஹா.. வந்திடுச்சுயா.. சென்னையில் கொட்டி வரும் கனமழை.. குளிருதுப்பா சென்னையில!
சென்னை: சென்னையில் சற்று முன்பாக திடீரென கனமழை கொட்டி வருகிறது. தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று மாலை இளம் வெயில் நேரம்.. சற்று அன்னாந்து பார்த்தால் மெதுவாக கூடிக்கொண்டே இருந்தன மேகங்கள்.. திடீரென ஒன்றிணைந்த மேகங்களால் சென்னையில் இன்று இரவு கொட்டத் தொடங்கியது மழை. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டை, ராயப்பேட்டை திருவல்லிக்கேணி, நந்தனம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மிண்ட், ராயபுரம், பாரிஸ் கார்னர் பகுதிகளில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது..
சென்னை கேகே நகர், கிண்டி, அசோக்நகர், மாம்பலம், உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இந்த மாலை காரணமாக சாலையில் வெள்ள நீர் பல இடங்களில் பாய்ந்தோடுகிறது. மக்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு மழையை ரசித்து வருகிறார்கள். மழையில் நனைந்த பலர்,, அப்பப்பா சென்னையில் என்னம்மா குளருது என்று சந்தோஷத்தில் மகிழ்ந்து வருகிறார்கள்.