இருக்கு.. இன்னைக்கு சென்னையில கனமழை இருக்கு.. வானிலை மையம் சொல்லியிருக்கறத பாருங்க!
Recommended Video
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கொளுத்தும் வெயிலில் இருந்து சற்று விடுதலையாகியுள்ளனர் சென்னை மக்கள்.
சென்னையில் கடந்த ஜனவரி மாதம் முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
தண்ணீர் பஞ்சம்
பருவமழை, கோடை மழை என அனைத்தும் கைவிரித்ததால் சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாயினர்.
நீர்மட்டம் உயர்வு
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னை மக்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதோடு சென்னையின் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
இன்று கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் சென்னை உட்பட வட தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலில் கூறிருப்பதாவது, தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது.
வட தமிழகத்தில் கனமழை
இதன் காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும். வேலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இடியுடன் கனமழை
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இடைவெளி விட்டு ஓரிரு முறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் நேற்றை போலவே இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.