சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை.. தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. சென்னை வானிலை மையம்

Google Oneindia Tamil News

Recommended Video

    chennai rain update | சென்னையில் அடுத்த 2 மணி நேரம் முக்கியம்

    சென்னை: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டதாக சென்னை வானிலை தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த புதன்கிழமை இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.

    இதையடுத்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் விடியற்காலை வரை சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

    சென்னை மக்களே! இன்று கனமழை கொட்டும்.. இந்த நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராதீர்- நார்வேசென்னை மக்களே! இன்று கனமழை கொட்டும்.. இந்த நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராதீர்- நார்வே

    கனமழை

    கனமழை

    இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும்.

    48 மணி நேரத்திற்கு

    48 மணி நேரத்திற்கு

    எனவே குமரி கடல், மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்யும்.

    மக்கள்

    மக்கள்

    ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் 8 செ.மீ.ருக்கு மேல் மழை பெய்யும். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    எந்தவித பாதிப்பு

    எந்தவித பாதிப்பு

    இந்திய பெருங்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இது வடக்கு நோக்கி நகரும். எனவே தமிழகத்திற்கு இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை என்றார் புவியரசன்.

    48 மணி நேரத்திற்கு

    48 மணி நேரத்திற்கு

    எனவே குமரி கடல், மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்யும். கடலுார், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    English summary
    Chennai Meteorological department says that Chennai will get more rainfall for the next 2 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X