சென்னைக்கென்று.. "ஸ்பெஷல் எடிஷனுடன்" காத்திருக்கிறது மழை.. வெதர்மேன் குட் நியூஸ்!
சென்னையில் மட்டும் தனியாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்து இருக்கிறார்.
Recommended Video
சென்னை: சென்னையில் மட்டும் தனியாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்து இருக்கிறார்.
சென்னையில் மழையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த வாரம் அங்கு தொடங்கிய மழை இன்னும் விடவில்லை. இன்னும் மூன்று நாட்களுக்கு அங்கு மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை கடைசி கட்டத்தில் மிக தீவிரமாக பெய்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு வெளியிட்டுள்ளார்.
அட.. தேர்தலில் போட்டியிடும் முன்பே முதல் வெற்றி.. டிரம்பிற்கு ஒரே சந்தோசம்.. மீண்டும் அதிபராகிறாரா?
என்ன போஸ்ட்
தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில் , மிகவும் வித்தியாசமான வடகிழக்கு பருவமழை தற்போது தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தற்போது நல்ல மழை காலம் தமிழகத்தில் நிலவி வருகிறது. குன்னூர் பெல்ட் பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டெல்டா எப்படி
அதேபோல் டெல்டாவில் சில பகுதிகளில் மதியத்தில் இருந்து இரவு வரை மழை பெய்யும். அதேபோல் எப்போதும் போல இரவில் இருந்து காலை வரை கடலோர பகுதிகளில் மழை பெய்யும். ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை மழை பெய்யும் .
ஆனால் என்ன
ஆனால் இங்கெல்லாம் மிகப்பெரிய அளவில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மட்டும் எப்படி தனியாக கனமழை பெய்ததோ அதேபோல் கனமழை மீண்டும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மழை கண்டிப்பாக பெய்யும்.
தினமும் மழை
அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் வரும் டிசம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளில் இருந்து மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் ஒரு நாளுக்கு முன்பாகவே மழை பெய்ய வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் தினமும் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.