ச்சே.. கரெக்டா அந்த நேரம் பார்த்தா.. "அது" வழுக்கி விழணும்.. கொந்தளித்த மனைவி.. பரிதாப கணவர்!!
சென்னை: சென்னையில் விக் வைத்துக் கொண்டு கணவன் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக மனைவி ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீஸாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (29). கடந்த 2015-ஆம் ஆண்டு மேட்ரிமோனி சைட் மூலம் ராஜசேகருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது 50 சவரன் நகையும் ரொக்க பணமும் பெண் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு திருமணம் ஆன போதும் இருவரும் குடும்பம் நடத்தவில்லை என கூறப்படுகிறது.
ஈடுபாடு காட்டாத கணவர்
அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்த ராஜசேகர் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் ஒரு நாள் அந்த பெண்ணே இவரை வற்புறுத்தி இல்லற வாழ்க்கையில் இணைய சொன்னார். அப்போது தலையில் இருந்த விக் கழன்று விழுந்துவிட்டது.
வழுக்கை
அப்போது ராஜசேகர் தலையில் முடி இல்லாமல் வழுக்கையுடன் இருந்ததை கண்டு அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார். தலையில் விக் அணிந்து புகைப்படம் எடுத்து அதை மேட்ரிமோனி சைட்டில் போட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக ராஜசேகரிடம் வாக்குவாதம் செய்தார்.
பொய்
இதற்காகத்தான் இத்தனை நாட்கள் தன்னுடன் குடும்பம் நடத்தாமல் இருந்தீர்களா என்றும் அந்த பெண் கேட்டு சண்டையிட்டுள்ளார். வரதட்சிணையாக கொடுத்த 50 சவரன் நகைகளையும் ராஜசேகர் செலவு செய்துவிட்டு வங்கியில் லாக்கரில் இருப்பதாக பொய் கூறிவிட்டார்.
விசாரணை
இவையெல்லாம் தனக்கு தெரிந்தவுடன் தன்னை ராஜசேகர் அடித்து துன்புறுத்துவதாக கடந்த 2015-ஆம் ஆண்டே புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ராஜசேகர், அவரது தாயார் ஜெகதா, தந்தை ஜெகநாதன் ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.