பலான படம் நிறைய பார்ப்பேன்.. மோகம் ஜாஸ்தி ஆயிருச்சு.. ஒரு பெண்ணையும் விடலை.. அதிர வைத்த வாலிபர்!
பெண்களை தவறாக வீடியோ எடுத்து பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: "நிறைய செக்ஸ் வீடியோக்கள் பார்ப்பேன்.. அதை பார்த்து பார்த்து பெண்கள் மீது மோகம் ஜாஸ்தியா ஆயிடுச்சு. தெருவுல, பஸ் ஸ்டாண்டில், ரயில்களில் பெண்கள் போகும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்திடுவேன்" என்று இளைஞர் ஒருவர் சென்னை போலீசாரை அதிர வைத்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் பெரும்பாலான பெண் ஊழியர் திடீரென அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில், தங்கள் அலுவலகத்தில் நண்பர்களுடன் எடுத்த செல்ஃபி போட்டோக்களை போலியான ஃபேஸ்புக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதில் ஆபாச வார்த்தைகளால் வர்ணித்து கமெண்ட்கள் பதிவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மொத்தமே 3 நிமிஷம்தான்..முழுசா எரிந்து கருகிட்டார்.. மின்னல் நேரத்தில் எல்லாம் முடிஞ்சு போச்சு!
முகமது
இதையடுத்து, இந்த போட்டோக்கள் எல்லாம், அநேகமாக தங்களுடன் வேலைபார்க்கும் ஏதாவது ஆண் ஊழியரின் வேலையாகத்தான் இது இருக்கும் என்று போலீசார் சந்தேகித்தனர். அப்படி சிக்கியவர்தான் கயாஸ் முகமது.. பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கயாஸ் முகமது. நன்றாக படித்திருக்கிறார்.. முதுகலைப் பட்டம் முடித்துள்ளார்.. ஆனால் புத்திதான் சரியில்லை.
நண்பர் வீடு
ராயப்பேட்டையில் உள்ள அந்த தனியார் ஆஸ்பத்திரியில்தான் ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் நண்பர் வீட்டில்தான் தங்கி உள்ளார். அவரை போலீசார் விசாரணை செய்தபோதுதான் பல திடுக் தகவல்கள் வெளியாயின. "காலேஜ் படிக்கும்போது ஹாஸ்டலில்தான் தங்கி படிச்சேன். இன்டர்நெட்டில் நிறைய ஆபாச வீடியோக்களை பார்ப்பேன்.. அந்த வீடியோவாலதான் நான் இப்படி மாறிட்டேன்.
வீடியோக்கள்
செக்ஸ் படங்களை பார்த்து, பார்த்து, பெண்கள் உடல் மீதான மோகம் அதிகமாயிடுச்சு. அதனால், ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் எடுக்க ஆரம்பிச்சிட்டேன். தெருவுல, பஸ் ஸ்டாண்டில், ரயில்களில் பெண்கள் போகும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்திருக்கிறேன். அந்த போட்டோ, வீடியோக்களை ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் ஓபன் செய்து, அதில் போஸ்ட் பண்ணிடுவேன்.
ஃபேஸ்புக்
அதில் எந்த போட்டோ, வீடியோ நிறைய ஷேர் செய்கிறார்களோ, அதற்கு அசிங்க அசிங்கமான கமெண்ட்களை நானே போடுவேன். ஆனால், ஃபேஸ்புக்கில் போடப்படும் பெண்களின் முகத்தை மறைத்து, மார்பிங் செய்துதான் அந்தஆபாச வீடியோக்களை வெளியிட்டேன். அதனாலதான் என்மேல எந்த புகாரும் போலீசில் இல்லாமல் தப்பித்தேன்" என்றார்.
ஜெயில்
கூட வேலைபார்க்கும் பெண்களை மட்டும் இல்லை.. வீட்டு பெண்களையும், நண்பர்களையும் இவர் ஆபாசமாக படம் எடுத்து பதிவேற்றம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இப்போது முகமது ஜெயிலில் உள்ளார்.