சென்னையில் திருமணம் ஆகாத விரக்தி.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு
சென்னை: சென்னையில் போரூர் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் சுப ஸ்ரீ நகரில் தனியாக வசித்து வந்தவர் வெங்கடேசன்(30), குடிபழக்கம் உடைய இவர் கடந்த இரண்டு தினங்களாக வீட்டிலிருந்து வெளியே வரவில்லை இவரது வீட்டிலிருந்து இன்று மிகுந்த துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வெங்கடேசன் தூக்குப்போட்டு உடல் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குடிப்பழக்கம் உடைய இவருக்கு இன்னமும் திருமணம் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் தற்போது தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.