மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் பரதநாட்டியம்.. கதகளி.. வியந்து ரசித்த மோடி- ஜின்பிங்
Recommended Video
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பரதநாட்டியம், கதகளியை பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜின் பிங்கும் வெகுவாக ரசித்தனர்.
மகாபலிபுரம் வந்துள்ள பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் ஆகியோர் அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க அர்ஜுணன் தபசு, ஐந்து ரதம், வெண்னை உருண்டை, உள்பட பல்வேறு சிற்பங்களை சுற்றிப்பார்த்தனர்.
அப்போது இருவரும் ஒரு இடத்தில் மரத்தின் அடியில் அமர்ந்து இளநீர் அருந்திபடி 20 நிமிடங்கள் பேசினார்கள். மோடி ஆங்கிலத்தில் மாமல்லபுரத்தின் சிறப்புகளை விளக்கி கூறினார்.
பின்னர் காரில் ஏறி புறப்பட்டு சென்ற அவர்கள் சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு வந்தடைந்தனர். அங்கு கோவிலின் அழகை கண்டு இருவரும் ரசித்தனர். பின்னர் மாலை மயங்கி வேளையில் காலசேந்திரா அமைப்பு சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
மோடி- ஜின் பிங் சந்திப்பு.. மாமல்லபுரத்தை தேர்வு செய்தது யார்? வெளியுறவுத்துறை விளக்கம்
பரதநாட்டியம், கதகளி நடன நிகழ்ச்சிகளை மோடியும் ஜின் பிங்கும் வெகுவாக பார்த்து ரசித்தனர். கலை நிகழ்ச்சிகள் நடந்து வரும் மேடையை காட்டியபடி பிரதமர் மோடி ஜன்பிங்கிடம் கலைகளின் சிறப்பையும் எடுத்துரைத்தார். ராமாயணம் உள்பட மொத்தம் 6 நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டது