சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜி ஜின்பிங் வருகை.. மகாபலிபுரத்தில் குவிந்த சீன பாதுகாப்பு அதிகாரிகள்.. அதிகாலையிலிருந்து ஆய்வு!

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை அடுத்து மகாபலிபுரத்தில் சீன அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை அடுத்து மகாபலிபுரத்தில் சீன அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.

தமிழகம் தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகைக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. வரும் 11ம் தேதி ஜி ஜின்பிங் தமிழகம் வருகிறார்.

அவர் பிரதமர் மோடியை காஞ்சிபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

அமேசானுக்கு ஒரு நியாயம்.. ஆரேவுக்கு ஒரு நியாயமா.. மும்பை போலீஸை கேள்விக்கணைகளால் தொடுத்த மக்கள்!அமேசானுக்கு ஒரு நியாயம்.. ஆரேவுக்கு ஒரு நியாயமா.. மும்பை போலீஸை கேள்விக்கணைகளால் தொடுத்த மக்கள்!

எவ்வளவு ஆள்

எவ்வளவு ஆள்

11ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்த ஆலோசனை நடக்க உள்ளது. பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள், பொருளாதாரம் சார்ந்த அறிவிப்புகள் இந்த ஆலோசனையில் அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள், அறிவிப்புகளும் இதில் கையெழுத்தாகலாம் என்று குறிப்பிடுகிறார்கள்.

தமிழக அரசு

தமிழக அரசு

இந்த நிலையில் ஜி ஜின்பிங் வருகைக்காக தமிழக அரசு மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்க உள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள், சிற்பங்கள் ஆகியவற்றை ஜி ஜின்பிங் பார்வையிடுவார். இதற்காக தமிழக அரசு தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்த நிலையில் இன்றில் இருந்து மகாபலிபுரத்தில் முக்கிய சில இடங்களுக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் பார்வையிட உள்ள இடங்களுக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு சோதனைகள் நடந்து வருகிறது. தற்போது இந்திய ராணுவ வீரர்கள், சிஆர்பிஎப் வீரர்கள், போலீஸ் அதிகாரிகள் அங்கு பாதுகாப்பு பணியில் நிற்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீனா பாதுகாப்பு

சீனா பாதுகாப்பு

அதேபோல் சீனாவை சேர்ந்த 10 அதிகாரிகள் தற்போது அங்கு முதற்கட்டமாக பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறார்கள். இன்று சீனாவில் இருந்து கூடுதலாக பாதுகாப்பு அதிகாரிகள் மகாபலிபுரத்தில் சோதனை செய்ய உள்ளனர். முதல்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chinese officials doing security checkups in Mahabalipuram amidst president Xi-Jinping arrival to Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X