பிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான முறைசாரா மாநாடு வெற்றிகரமாக நிறைவு!
Recommended Video
சென்னை: தமிழகம் வருகை தந்த சீனா அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி கடந்த 2 நாட்களாக நடத்திய பேச்சுவார்த்தைகள் இன்று நிறைவடைந்தன.
இந்தியா- சீனா சரித்திரத்தில் புதிய திருப்பமாக இரு தலைவர்களும் முறைசாரா மாநாடுகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதன் ஒரு கட்டமாக மாமல்லபுரத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இருநாட்டு தலைவர்களும் புராதான சிற்பங்களை ரசித்தபடி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கடற்கரை கோவிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள ஹோட்டலில் தங்கி இருந்தார்.
சீனா அதிபர் ஜின்பிங், சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் தங்கி இருந்தார். இன்று இரு தலைவர்களும் கோவளம் ஹோட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அதிகாரிகள் குழுவினர் முன்னிலையில் இருதலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் பின்னர் சென்னை திரும்பிய ஜின்பிங் நேபாள தலைநகர் காத்மண்டு செல்கிறார்