ஒருபக்கம் மீ டூ... இன்னொரு பக்கம் ஒரு தெய்வம் தந்த பூவே.. சின்மயி செம பிஸி!
வைரமுத்து பாடலை இசை நிகழ்ச்சி ஒன்றில் சின்மயி பாடினார்.
சென்னை: மீ டூ விவகாரம் ரணகளமாக போய் கொண்டிருக்கும் இந்த வேளையில், வைரமுத்துவை வறுத்தெடுத்து வரும் இந்த வேளையில், அவர் எழுதிய பாடலையே பாடி ரசிகர்களை மகிழ்வித்தார் சின்மயி.
கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சின்மயி சொன்னதில் இருந்தே தமிழகம் சூடாகி கிடக்கிறது. சமூக வலைதளங்கள் எல்லாமே பரபரப்பாகி உள்ளன.
திரைப்பட பாடல்கள்
இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பாடல் கச்சேரி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் சின்மயி மற்றும் விஜய் பிரகாஷ் இருவரும் பங்கேற்று திரைப்பட பாடல்களை பாடினர். இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு தெய்வம் தந்த பூவே
இந்த நிகழ்ச்சியில் சின்மயி, திரைத்துறையில் கால்பதித்த முதல் படம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடலை பாடினார். வைரமுத்துவின் வரிகளில் எழுதப்பட்ட இந்த பாடல் சின்மயிக்கு உலகளவில் பெயரையும் புகழையும் பெற்று தந்த பாடலாகும்.
ரசிகர்கள் ஆரவாரம்
இந்த பாடலை சின்மயி பாட தொடங்கிய உடனேயே வளாகத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் உற்சாக குரல் எழுப்பினர். வளாகமே ரசிகர்களின் கைதட்டலால் அதிர்ந்தது. இதனை தொடர்ந்து சில ஹிந்தி பாடல்களை மட்டும் பாடிவிட்டு நிகழ்ச்சியை முடித்தார் சின்மயி.
மக்களிடம் சலசலப்பு
ஒருபக்கம் மீ டூ... இன்னொரு பக்கம் ஒரு தெய்வம் தந்த பூவே என்று சின்மயி பாடிய விவகாரம் பொதுமக்கள் மத்தியில் சலசலப்பாக பேசப்பட்டு வருகிறது.