எப்ப வேணும்னாலும் ஹேமந்த் ஜாலியா இருப்பாராம்.. ஒரு பொண்ணை கர்ப்பமாக்கி.. புட்டு புட்டு வைத்த நண்பர்
ஹேமந்த் குறித்து ரோகித் சொல்லும் தகவல்கள் பகீரை கிளப்பி வருகின்றன
சென்னை: ஹேமந்த் தினமும் ஒரு உள்ளாடையை வாங்குற பழக்கம் இருப்பவராம்.. எப்போ வேண்டுமானாலும் எந்த பெண்களிடமும் காசு கொடுத்துவிட்டு ஜாலியாக இருந்துவிட்டு வருவாராம்.. இப்படி ஒரு தகவலை ஹேமந்தின் நண்பர் ரோகித் சொன்னதுதான் கடந்த 2 நாட்களாகவே சித்ராவின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது.
கொஞ்ச நாள் ஓய்ந்து கிடந்த சித்ராவின் மரண வழக்கு தற்போது 4 நாட்களாக சூடுபிடித்து வருகிறது.. அதற்கு காரணம், ஹேமந்த்தின் நண்பர் ரோகித் என்பவர்தான்.. இவர், ஹேமந்த்துக்கு ஜாமீன் தரக்கூடாது என்று ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அத்துடன் ஆதாரமாக சில ஆடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
ஆனால், இந்த ஆதாரங்கள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை, ஜோடிக்கப்பட்டவை, ஹேமந்த்தை மறைமுகமாக காப்பாற்றும் முயற்சியாகவே இது இருக்கிறது, இவர் யார் ஹேமந்த்துக்கு ஜாமீன் தரக்கூடாது என்று சொல்வதற்கு? இவ்வளவு நாள் எங்கிருந்தார்? ஏன் ஆடியோவை போலீசில் தரவில்லை? என்றெல்லாம் ஓய்வு பெற்ற சிபிஐ இயக்குனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. அத்துடன் இந்த ஆடியோ விவகாரமும் சித்ராவின் மரண வழக்கை திசைதிருப்பும் வகையில் இருப்பதாகவும் கருத்துக்களை சொல்லி வருகின்றனர்.
மேலும், ரோகித் அளித்து வரும் பேட்டிகளில், ஹேமந்த் குறித்து சொல்லப்படும் தகவல்கள் எல்லாம் பகீரை கிளப்புகிறது.. சித்ரா கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் ஹேமந்த்துக்கு பலமுறை இருந்ததாம்.. அதை உறுதி செய்துகொள்ள, டாக்டர்களிடம் செக்கப் செய்ய வேண்டும் என்று சொன்னாராம். மேலும் ஹேமந்த் இயல்பாகவே உல்லாசத்துக்கு ஆசை கொண்டவராம்.
தினமும் ஒரு உள்ளாடையை வாங்கும் பழக்கமும் ஹேமந்த்துக்கு இருந்துள்ளது... அதுமட்டுமல்ல, நினைக்கும் நேரத்தில், நினைக்கும் பெண்களிடம் பணத்தை வாரி இறைத்து ஜாலியாகவும் இருப்பாராம்.. ஒரு பெண் தொகுப்பாளரை அப்படி கர்ப்பமாக்கி, அந்த கருவையும் கலைத்தாராம்.. அந்த கேஸ் தி. நகர் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளதாம்..
ஈராக் தலைநகரில் அடுத்தடுத்த பயங்கர குண்டுவெடிப்பு.. தற்கொலை படை தாக்குதலில் 20 பேர் பலி, பலர் காயம்
இப்படி பல தகவல்களை ரோகித் சொன்னதுதான், சித்ரா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இப்படிப்பட்ட குணங்களை உடைய ஹேமந்த்துடன், ரோகித் ஏன் கடைசிவரை நட்பாக இருந்தார்? ஏன் அப்போதே போலீசில் இதை பற்றி சொல்லவில்லை? குறைந்தபட்சம் சித்ராவிடமாவது இதையெல்லாம் சொல்லி அவரை அலர்ட் செய்திருக்கலாமே? என்ற சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.