சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பல்லாவரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை திருடிய கும்பலை சேர்ந்த ஒருவர் கைது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பல்லாவரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கைரேகை பதிவு செய்யப்படும் ஆவணங்களை பறித்து சென்ற நபரை அங்கிருந்த பணியாளர்கள் பிடித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை பல்லாவரத்தில் உள்ளது சார் பதிவாளர் அலுவலகம். இங்கு பட்டப்பகலில் அலுவலகத்தில் ஒரு கும்பல் புகுந்தது.

Chromepet police arrested a man from gang who snatches documents in registrar office

அப்போது பத்திரப் பதிவு செய்யும் போது கைரேகை பதிவு செய்யப்படும் ஆவணங்கள் அடங்கிய புத்தகத்தை அங்கிருந்த அரசு அலுவலர் கையில் இருந்து பறித்து சென்றனர்.

இதையடுத்து அந்த கும்பலில் இருந்த ஒருவரை சார் பதிவாளர் அலுவலக பணியாளர்கள் மடக்கி பிடித்தனர். அந்த நபரை குரோம்பேட்டை போலீஸில் ஒப்படைத்தனர்.

ஆபாச நடனம்.. கிளப்பில் 21 இளம்பெண்களை சுற்றி வளைத்த ஹைதராபாத் போலீஸ்.. ஆபாச நடனம்.. கிளப்பில் 21 இளம்பெண்களை சுற்றி வளைத்த ஹைதராபாத் போலீஸ்..

காவல்துறை விசாரணை செய்ததில் பிடிப்பட்ட நபரின் பெயர் கண்ணன் (எ) கோல்டு கண்ணன் தெரிய வந்தது. இவன் ஒரு என்ஜீனியரை ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மடிப்பாக்கம் காவல்துறை தேடி வருகின்றனர்.

போலி ஆவணம் தயார் செய்து மடிப்பாக்கம் ராம் நகரில் பிளாட் எண் : 726,728 மனையை அபகரித்த வழக்கில் மத்திய குற்றப் பிரிவு காவல் துறை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
One from a gang arrested who illegally entried in Registrar office and snatches important documents. Chromepet police searches others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X