அதிர்ந்த சென்னை.. விசிக - புரட்சி பாரதம் நிர்வாகிகள் பயங்கர மோதல்.. பேனரில் மோதிய பைக்கால் களேபரம்
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பெண்கள் உள்பட 7 பேர் காயமடைந்ததால் பெரும் பரபரப்பு உருவானது.
தொல் திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை நடத்தி வருகிறார். இவர் திமுக கூட்டணியில் உள்ளார். அதேபோல் பூவை ஜெகன்மூர்த்தி புரட்சி பாரதம் கட்சியை நடத்தி வருகிறார்.

இந்த 2 கட்சிகளும் எதிரெதிர் அணியில் உள்ளன. அதாவது திமுக கூட்டணியில் விசிக உள்ளது. அதேபோல் அதிமு கூட்டணியில் புரட்சி பாரதம் உள்ளது.
இந்நிலையில் தான் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. அதாவது விருகம்பாக்கத்தில், விசிக நிர்வாகி ஆதவன் பைக்கில் சென்றார். அப்போது அவரது பைக் புரட்சி பாரதம் கட்சி பேனர் மீது மோதியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த புரட்சி பாரதம் கட்சியினர், ஆதவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றியது. இதனால் அங்கு கூட்டம் கூடியது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைக்கலப்பாக மோதியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி தாக்கிக்கொண்டனர்.
இந்த மோதலில் விசிகவின் 3 பெண்கள், புரட்சி பாரதம் தரப்பில் 4 பேர் என மொத்தம் 7 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி இருதரப்பிலும் விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த மோதல் விருகம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications