அப்போலோவில் பரபரப்பு.. துரைமுருகன் அட்மிட் .. எடப்பாடி பழனிச்சாமிக்கு செக்கப்!
அப்போலோ மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக முதல்வர் வந்திருந்தார்
Recommended Video
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடம்பு சரியில்லாமல் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிந்த சமாச்சாரமே.. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அப்போலோ ஆஸ்பத்திரிக்கு வந்து போயுள்ளாராம்.
தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் ஓய்வெடுத்து வருகின்றனர். ஒரு பக்கம் வெயில் வாட்டி வருவதால், குடும்பத்துடன் வெளிமாநிலம், வெளிநாடு என சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்படித்தான் ஸ்டாலின் சிங்கப்பூர் பயணம், பிரகாஷ்ராஜ் காஷ்மீர் என சென்றுள்ளனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ, கோவையில் புத்துணர்வு சிகிச்சை மேற்கொள்வது வழக்கம். இயற்கை முறையில் புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக கோவை சென்றுள்ளதாகவும், அங்கே இயற்கை நல மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி இந்த சிகிச்சையை மேற்கொள்ள போவதாகவும் 2 நாட்களுக்கு முன்பு செய்திகள் வந்தன.
இந்நிலையில், உடல் சுகவீனம் ஏற்பட்டு, துரைமுருகன் கிரீம்ஸ் ரோடில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு காய்ச்சல் அதிகமாகி, மூச்சுத் திணறல் ஏற்பட்டுவிடவும் உடனடியாக அங்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சையும் தீவிரமாக நடந்து வருகிறது.
துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு
இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அதே அப்போலோ ஆஸ்பத்திரிக்கு வந்து போயுள்ளார் என்று கூறப்படுகிறது. சுமார் அரை மணி நேரம் மட்டுமே ஆஸ்பத்திரியில் இருந்தாராம் எடப்பாடியார். ரத்தம், யூரின், ப்ரஷர், ஈசிஜி.உள்ளிட்ட செக்கப் செய்யப்பட்டுள்ளது. எல்லாம் நார்மல் செக்கப்புதான் என்கிறது ஆஸ்பத்திரி வட்டாரம்!
அனைவரும் நலமுடன் திரும்பட்டும்.. மக்கள் பணியை தொடரட்டும்