ஆட்சி வேறு; பழக்கவழக்கம் வேறு; -விஜயபாஸ்கருக்கு முதல்வர் கைவிரிப்பு
Recommended Video
சென்னை: காவல்துறை இடமாற்றக் கோரிக்கை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வரை அணுகிய நிலையில், அவர் ஆட்சி வேறு, பழக்கவழக்கம் வேறு எனக்கூறி கைவிரித்து விட்டாராம்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திக்காத சோதனைகளே இல்லை என்று சொல்லலாம். குட்கா விவகாரத்தில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்ட டெண்டர் வரை அனைத்திலும் அவர் பெயர் அடிபடாத இடமே கிடையாது. மனிதர் அந்தளவுக்கு சர்ச்சையில் சிக்கினாலும், தனது சாதுர்யமான நடவடிக்கை மூலம் அனைத்தையும் சமாளித்து வருகிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது அவர் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் பணப்பட்டுவாடா பட்டியல் டெல்லியையே தலை சுற்ற வைத்தது. இதற்கடுத்து தான் அவர் மீது சிபிஐ பார்வை அழுத்தமாக பதிந்தது. ஒரு கட்டத்தில் விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவார் என்றெல்லாம் கூறப்பட்டது. மேலும், அவரது தந்தை சின்னதம்பி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சருடன் அண்மையில் லண்டன் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நான்கு நாட்கள் அங்கு கலக்கினார். முதல்வருடன் அவர் இருந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்து முதல்வருடன் விஜயபாஸ்கர் நெருக்கமாகிவிட்டார் போல எனப் பேசப்பட்டது.
இடைத்தேர்தல் மூலம் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆழம் பார்க்கிறதா அதிமுக?
ஆனால் உண்மை அப்படியில்லையாம், புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் 10 பேர் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்படதை அடுத்து, அது குறித்து பேச முதல்வரை அணுகினாராம் விஜயபாஸ்கர். முதல்வரோ, போலீஸ் துறையில் தலையிட வேண்டாம், நம்ம பழக்கவழக்கம் வேறு ஆட்சி வேறு எனக் கூறி கைவிரித்து விட்டாராம்.