கொரோனா தடுப்பு: ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. கடந்த 1 வார காலமாக சென்னையில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவிவருகிறது.
சென்னையில் இருந்து இதர மாவட்டங்களுக்கும் கொத்து கொத்தாக கொரோனா பரவி வருகிறது. இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் பன்வாரிலாலிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவரித்தார். ஆளுநருடனான இச்சந்திப்பின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் சென்றார்.
Comments
tamilnadu coronavirus edappadi palanisamy governor தமிழகம் கொரோனா வைரஸ் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
English summary
Tamilnadu Chief Minister Edappadi Palanisamy today met Governor Banwarilal Purohit on coronavirus situation in the state.
Story first published: Monday, May 4, 2020, 17:05 [IST]