"தங்கள் தாய்க்கும் அவரை போல்".. ட்விட்டரில் வந்த வீடியோவுக்கு பதில் கூறிய தமிழக முதல்வர்
சென்னை: தூத்துக்குடியில் இலவசமாக முகக் கவசங்களை வழங்கிய பெண்ணுக்கு ட்விட்டரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டரில் ஆக்டிவ்வாக இயங்கி வருகிறார். அந்த ட்விட்டரை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தி வருகிறார். அரசின் அறிவிக்கைகள், அறிவுரைகளை அவ்வப்போது ட்விட்டரில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தூத்துக்குடியில் ஒரு பெண் இலவசமாக போலீஸாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் முக கவசத்தை விநியோகித்துள்ளார்.
இதை அந்த பெண்ணின் மகன் நவபாலன் என்பவர் அதை வீடியோவாக எடுத்து செய்தி சேனல்களுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் அனுப்பியுள்ளார். இந்த வீடியோவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.
தங்கள் தாய்க்கும், அவரைப்போல் கொரோனாவை எதிர்க்க அரசோடு சேர்ந்து தங்களால் இயன்ற முயற்சிகளை மனிதநேயத்துடன் மேற்கொண்டு வரும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் எனது இதயம் நிறைந்த பாராட்டுக்கள்! https://t.co/P8WGVurfd4
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 7, 2020
அவர் கூறுகையில் தங்கள் தாய்க்கும், அவரைப்போல் கொரோனாவை எதிர்க்க அரசோடு சேர்ந்து தங்களால் இயன்ற முயற்சிகளை மனிதநேயத்துடன் மேற்கொண்டு வரும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் எனது இதயம் நிறைந்த பாராட்டுக்கள்! என தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் வந்த ஒரு வீடியோவுக்கு முதல்வர் பதில் அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.