7 பேர் விடுதலையில் இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும்.. சட்டசபையில் முதல்வர் பேச்சு
சென்னை: 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானம் குறித்து இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் சட்டத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது 7 பேர் விடுதலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
அப்போது அவர் 7 பேரில் ஒருவரை (நளினி) மட்டுமாவது விடுதலை செய்ய வேண்டும். என கேட்டார். இதற்கு பதிலளித்த முதல்வர் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுக்க வேண்டும். தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது என்றார் முதல்வர்.
அப்போது துரைமுருகன் பேசுகையில் ஆளுநரை தனிப்பட்ட முறையில் சந்தித்து வலியுறுத்தினீர்களா. தீர்மானத்தை அனுப்பிவிட்டு அமைதியாக இருக்கிறீர்கள். எங்கள் ஆட்சியில் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.
அதற்கு முதல்வர் எங்கள் வேலையை நாங்கள் சரியாக செய்துள்ளோம். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவரை மட்டும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்றார் முதல்வர்.