சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாத்தான்குளம் பரபரப்பு மத்தியில் ஆளுநரை சற்று நேரத்தில் முதல்வர் சந்திக்கிறார்!!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தொற்று பரபரப்பு செய்திகள், சாத்தான்குளம் பரபரப்பு செய்திகளுக்கு இடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துப் பேசுகிறார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்து தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது.

CM Edappadi Palaniswami to meet governor banwarilal purohit

சென்னைக்கு அடுத்த படியாக மதுரையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு மேலும் 7 நாட்களுக்கு முழுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை முழுமுடக்கம் நீட்டிப்பு செய்துள்ளார்.

இதற்கிடையே இன்னும் சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் முதல்வர் சந்தித்துப் பேசுகிறார்.

ராணுவ வீரர்களை, மோடி சந்தித்த மருத்துவமனை பற்றி வெளியான வதந்திகள்.. 'தீய நோக்கம்' என ராணுவம் கண்டனம்ராணுவ வீரர்களை, மோடி சந்தித்த மருத்துவமனை பற்றி வெளியான வதந்திகள்.. 'தீய நோக்கம்' என ராணுவம் கண்டனம்

சாத்தான்குளம் தந்தை , மகன் இறப்புக்குப் பின்னர் ஆளுநரை முதல்வர் சந்திப்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. விசாரணை தொடர்பாக ஆளுநரிடம் முதல்வர் விளக்கம் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Tamil Nadu CM Edappadi Palaniswami will meet Governor Banwarilal Purohit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X