சென்னையில் 1250 பேருக்கு கொரோனா- கோவை, சேலத்தில் தொடரும் தீவிர பாதிப்பு
சென்னை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமையன்று 1,250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 389 பேருக்கும் சேலத்தில் 294 பேருக்கும் புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று 5,015 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் 1250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
தமிழகத்தில் மேலும் 5,015 பேருக்கு கொரோனா; 5,005 பேர் டிஸ்சார்ஜ்; 65 பேர் மரணம்!
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 37
- செங்கல்பட்டு 258
- சென்னை- 1250
- கோவை- 389
- கடலூர்- 84
- தருமபுரி- 86
- திண்டுக்கல் - 35
- ஈரோடு - 163
- கள்ளக்குறிச்சி- 46
- காஞ்சிபுரம் - 158
- கன்னியாகுமரி - 79
- கரூர்- 48
- கிருஷ்ணகிரி- 88
- மதுரை- 97
- நாகப்பட்டினம் - 61
- நாமக்கல் - 159
- நீலகிரி - 128
- பெரம்பலூர்- 12
- புதுக்கோட்டை- 48
- ராமநாதபுரம்- 26
- ராணிப்பேட்டை- 75
- சேலம் - 294
- சிவகங்கை - 28
- தென்காசி - 19
- தஞ்சாவூர்- 181
- தேனி- 64
- திருப்பத்தூர்- 52
- திருவள்ளூர்- 198
- திருவண்ணாமலை- 98
- திருவாரூர் - 98
- தூத்துக்குடி- 69
- நெல்லை- 77
- திருப்பூர்- 172
- திருச்சி - 87
- வேலூர்- 135
- விழுப்புரம்- 81
- விருதுநகர்- 35