சென்னையில் 1212 பேருக்கு கொரோனா- கோவை, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் நீடிக்கும் பாதிப்பு
சென்னை: சென்னையில் திங்கள்கிழமையன்று 1,212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 393 பேருக்கும் சேலத்தில் 304 பேருக்கும் புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் திங்கள்கிழமையன்று 4,879 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் 1212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5,000க்கு கீழே சென்றது- இன்று ஒருநாளில் 4,879 பேருக்கு தொற்று
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 27
- செங்கல்பட்டு 245
- சென்னை- 1212
- கோவை- 393
- கடலூர்- 132
- தருமபுரி- 84
- திண்டுக்கல் - 34
- ஈரோடு - 146
- கள்ளக்குறிச்சி- 41
- காஞ்சிபுரம் - 139
- கன்னியாகுமரி - 86
- கரூர்- 41
- கிருஷ்ணகிரி- 98
- மதுரை- 88
- நாகப்பட்டினம் - 54
- நாமக்கல் - 145
- நீலகிரி - 144
- பெரம்பலூர்- 6
- புதுக்கோட்டை- 43
- ராமநாதபுரம்- 16
- ராணிப்பேட்டை- 61
- சேலம் - 304
- சிவகங்கை - 25
- தென்காசி - 17
- தஞ்சாவூர்- 146
- தேனி- 60
- திருப்பத்தூர்- 63
- திருவள்ளூர்- 229
- திருவண்ணாமலை- 85
- திருவாரூர் - 114
- தூத்துக்குடி- 59
- நெல்லை- 62
- திருப்பூர்- 185
- திருச்சி - 45
- வேலூர்- 130
- விழுப்புரம்- 77
- விருதுநகர்- 42