அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: பிப்ரவரி 2- வது வாரம் வரை தமிழகத்தில் பனி தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், காற்றில் ஏற்பட்ட சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய பெருங்கடல், அதை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்கிய உள்ளதால் பலத்த காற்று வீசும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், வளிமண்டலத்தை கடக்கும் மேக கூட்டங்களால், தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
cold weather will continue till February 2 week Chennai Meteorological Center alert