காலையில் காலேஜ்.. மாலை நேரத்தில்.. போலீசாரை அதிர வைத்த இளம்பெண் மோகன பிரியா.. !
ரயில்களில் திருடி வந்த கல்லூரி மாணவி பிடிபட்டார்
Recommended Video
சென்னை: மோகன பிரியாவை பார்த்தால் யாருக்குமே சந்தேகம் வராது.. மாறுவேடத்தில் போலீஸ் பல நாள் பின்தொடர்ந்து, கடைசியாகத்தான் விசாரித்து கைது செய்துள்ளனர்.
சென்னையில் கொஞ்ச நாளாகவே எலக்ட்ரிக் ரயிலில் நிறைய திருட்டு நடப்பதாக போலீசுக்கு புகார் போய் கொண்டே இருந்தது. குறிப்பாக பெண்கள் கம்பார்ட்மென்ட்டில்தான் பயணிகளிடம் திருடு போவதாக சொல்லப்பட்டது.
தினமும் பர்ஸ், நகை, செல்போன் என்று ஏதாவது திருடு போவது நடந்து கொண்டே இருந்தது. இதனால் தொடர்ச்சியான புகார்கள் எழும்பூர், மாம்பலம் ஸ்டேஷனில் வந்து கொண்டே இருக்கவும், போலீசார் இதில் தீவிர கவனம் செலுத்தினர்.
மாம்பலம் போலீசார் மாறுவேடத்தில் அந்த கம்பார்ட்மென்ட்டில் ஏறி, தினமும் கண்காணித்தனர்.. யார் மீதும் முதலில் சந்தேகம் வரவில்லை.. ஆனால் நாள் ஆக ஆகத்தான் ஒரு இளம்பெண்ணின் நடவடிக்கை மீது சந்தேகம் விழ ஆரம்பித்தது.
அதனால், அவரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தியபோதுதான், விஷயம் புரிந்தது. அந்த பெண், கல்லூரியில் சயின்ஸ் & ஆர்ட்ஸ் படிக்கும் மாணவியாம்.. பெயர் மோகனப்பிரியா என்பது தெரியவந்தது. பகலில் காலேஜ் போய்விடுவாராம்.. சாயங்காலத்தில் ரயில்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார் மோகனப்பிரியா.
இதையடுத்து அவரிடம் 4 கிராம் தங்க நகைகள், பர்ஸ் போன்றவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். காலேஜ் படிக்கும் பெண் இப்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது பெரிய பரபரப்பை தந்துள்ளது.